சினிமா
ராஜமவுலி, பிரபாஸ்

மீண்டும் பிரபாஸுடன் கூட்டணி அமைக்கும் ராஜமவுலி?

Published On 2021-06-01 11:22 GMT   |   Update On 2021-06-01 15:35 GMT
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி, மீண்டும் பிரபாஸூடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு பாகங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்தது.

இதையடுத்து இயக்குனர் ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதையடுத்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமவுலி இயக்க உள்ளார்.


பிரபாஸ், ராஜமவுலி

இந்நிலையில், மகேஷ் பாபு படத்தை முடித்த பின் இயக்குனர் ராஜமவுலி மீண்டும் பிரபாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆதிபுருஷ், ராதே ஷியாம், சலார் போன்ற படங்களில் நடித்து வரும் பிரபாஸ், இந்த 3 படங்களையும் முடித்த பின் ராஜமவுலி படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News