சினிமா
பிரசாந்த் நீல்

பிரபாஸை தொடர்ந்து பிரபல நடிகரின் படத்தை இயக்கும் கே.ஜி.எப். இயக்குனர்

Published On 2021-05-13 05:31 GMT   |   Update On 2021-05-13 12:07 GMT
பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தை இயக்க உள்ளார்.
கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். அடுத்ததாக கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ள இவர், தற்போது பிரபாஸை வைத்து ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்க உள்ள புதிய படத்தில், ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டியில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News