சினிமா
செல்வராகவன்

‘புதுப்பேட்டை 2’ குறித்து குட் நியூஸ் சொன்ன செல்வராகவன்

Published On 2021-01-24 07:05 GMT   |   Update On 2021-01-24 10:34 GMT
புதுப்பேட்டை 2 பட எப்போது உருவாகும் என்பது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்க என்ன என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி, தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க உள்ளார். இதுதவிர தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படமும் தயாராக உள்ளது. 2024-ம் ஆண்டில் தான் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.



இந்நிலையில், ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படங்களுக்கு இடையில் ‘புதுப்பேட்டை 2’ படத்தை எடுக்க உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த தனுஷ் - செல்வராகவன் கூட்டணி தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் இணைந்து பணியாற்ற உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News