சினிமா
பாடகி சுசித்ரா

வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் - சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published On 2020-07-03 11:53 GMT   |   Update On 2020-07-03 11:53 GMT
வீடியோ கேட்டு ரூ.2 கோடி வரை பேரம் பேசியதாக பாடகி சுசித்ரா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இணையத்தில் மிகப் பெரிய புரட்சியே வெடித்தது.

  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ மற்றும் கருத்துகள் ஆங்கில ஊடங்களிலும் பேச வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என்றும் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

 பாடகி சுசித்ராவின் ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து  அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த ஆட்சியிலும் (எதிர்கட்சி ஆட்சியில் இருந்தப் போது) இதேப் போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதற்காக 2 கோடி ரூபாய் வரை தனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை“ என்றுள்ளார். 


 
தன்னிடம் பேசியவர் யார் என்ற விவரத்தை சுசித்ரா பதிவு செய்யவில்லை. சாத்தான்குளம் விவகாரம் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாடகி சுசித்ராவின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News