சினிமா
தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, தற்போது அரசியலில் நுழைய இருக்கிறார். #Kasthuri #ActressKasthuri
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார்.
இதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின் வழியில் இருக்கும். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. குறைந்த செலவில் வீடு கட்டி தருபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு.
கஜா புயல் நிவாரண பணிகளில் என்னுடன் ரஜினி மக்கள் மன்றம், கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆகியோர் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவிகள் செய்தனர்’ என்று கூறி உள்ளார்.