ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகம்

Published On 2019-08-20 10:57 GMT   |   Update On 2019-08-20 10:57 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். அறிமுகம் செய்துள்ளது. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முறையே ரூ. 68,721 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 69,754 (எக்ஸ்-ஷோரூம்) என விலையில் நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கின்றன. இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகின்றன. எனினும், இவற்றில் இரு பேட்டரி பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஸ்டான்டர்டு மாடலில் ஒரு பேட்டரி பேக் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.



ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா இ.ஆர். மாடலில் 600 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 48 வோல்ட் ஒற்றை பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே மணிக்கு அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் செல்லும் என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகும். 

ஹீரோ எலெக்ட்ரிக் நிக்ஸ் இ.ஆர். மாடலில் 48 வோல்ட் பேட்டரி பேக் மற்றும் 600 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஆப்டிமா இ.ஆர். போன்ற செயல்திறன் வழங்குகிறது. இதுவும் மணிக்கு அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகம் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News