ஆட்டோமொபைல்
ஹூன்டாய் புதிய தலைமுறை ஹேட்ச்பேக் கார்
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹேட்ச்பேக் காரின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 கார் கிராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.
புதிய ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் மட்டும் அழைக்கப்படும் என்றும் சர்வதேச சந்தையில் இந்த கார் கிராண்ட் ஐ10 என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படும் என தெிவிக்கப்பட்டு இருக்கிறது.
கிராண்ட் ஐ10 நியோஸ் ஐ10 பிராண்டிங்கில் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இது ஏற்கனவே விற்பனையாகும் கிராண்ட் ஐ10 மாடலுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் காருக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க துவங்கப்பட்டு விட்டது. புதிய காரை முன்பதிவு செய்ய ரூ. 11,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முன்புறத்தை அகலமாக்கி ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.எஸ். பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் யூனிட் 75 பி.எஸ். பவர் மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் AMT அல்லது 5-ஸ்பீடு MT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்படுகிறது.