ஆட்டோமொபைல்
ஜாவா 300

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் விலையில் திடீர் மாற்றம்

Published On 2021-02-01 05:45 GMT   |   Update On 2021-02-01 05:45 GMT
இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தி உள்ளது. ஜாவா, ஜாவா பார்டி டூ, பெராக் என மூன்று மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

மூன்று மாடல்களின் விலையும் முன்பை விட ரூ. 2,897 உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி இருக்கின்றன. தற்சமயம் அந்த வரிசையில் ஜாவா நிறுவமும் இணைந்துள்ளது.

உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் காரணமாக கூறி வருகின்றன. 



புதிய விலை விவரம்

ஜாவா பார்டி டூ சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.63 லட்சம்
ஜாவா பார்டி டூ டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.72 லட்சம்
ஜாவா 300 சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.76 லட்சம்
ஜாவா 300 டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.85 லட்சம்
ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.97 லட்சம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News