ஆட்டோமொபைல்
அப்ரிலியா ஸ்கூட்டர்

வெஸ்பா மற்றும் அப்ரிலியா வாகனங்களுக்கு பண்டிகை கால சலுகைகள் அறிவிப்பு

Published On 2019-09-26 07:36 GMT   |   Update On 2019-09-26 07:36 GMT
வெஸ்பா மற்றும் அப்ரிலியா இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு பண்டிகை கால சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



பியாஜியோ இந்தியா நிறுவனம் வெஸ்பா மற்றும் அப்ரிலியா இருசக்கர வாகனங்களை வாங்குவோருக்கு பண்டிகை கால தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. 

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் ரூ. 10,000 மதிப்புள்ள பலன்களை அக்டோபர் மாதம் வரை பெற முடியும் என பியாஜியோ இந்தியா அறிவித்துள்ளது. இரு பிராண்டுகளின் 125சிசி மற்றும் 150சிசி வாகனங்களுக்கும் இரண்டு ஆண்டுகள் வாரண்டி மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு கூடுதல் வாரண்டி வழங்கப்படுகிறது.

இதுதவிர இருசக்கர வாகனத்திற்கு பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் போது ரூ. 6000 மதிப்புள்ள பலன்களை கூப்பன் மற்றும் வவுச்சர்கள் வடிவில் பெறலாம். 125சிசி வாகனங்களை வாங்குவோருக்கு ரூ. 4000 மதிப்புள்ள ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் தரப்பு காப்பீடு வழங்கப்படுகிறது.



இந்தியாவில் அப்ரிலியா பிராண்டு எஸ்.ஆர். 125, எஸ்.ஆர். 150, மற்றும் எஸ்.ஆர். ரேஸ் மாடல்களுடன் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்டாம் மாடலை விற்பனை செய்கிறது. வெஸ்பா பிராண்டு எஸ்.எக்ஸ்.எல். 125, எஸ்.எக்ஸ்.எல். 150, வி.எக்ஸ்.எல். 150, எலிகன்ட் மாடல்களுடன் சமீபத்தில் அர்பன் கிளப் மாடலை விற்பனை செய்கிறது.

இந்திய சந்தையில் வாகனங்கள் விற்பனை குறைந்துள்ள நிலையில், புதிய சலுகைகளால் பியாஜியோ இந்தியா நிறுவன இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News