ஆட்டோமொபைல்
ஹோண்டா ஃபோர்ஸா 300

இந்தியாவில் ரூ. 9 லட்சம் விலையில் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யும் ஹோண்டா

Published On 2019-07-24 08:21 GMT   |   Update On 2019-07-24 08:21 GMT
ஹோண்டா நிறுவனம்த்தின் ஃபோர்ஸா 300 பிரீமியம் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஃபோர்ஸா 300 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஃபோர்ஸா 300 ஹோண்டாவின் பிரீமியம் ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை இந்தியாவில் ரூ. 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இத்தகைய விலையில் இது விலை உயர்ந்த ஸ்கூட்டராக ஹோண்டா ஃபோர்ஸா 300 இருக்கும். இதுதவிர இந்தியாவில் வெளியானதிலேயே சக்திவாய்ந்த ஸ்கூட்டராகவும் இது இருக்கும். புதிய ஃபோர்ஸா 300 ஸ்கூட்டரில் 279சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.



இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர், 27.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் ஹோண்டாவின் செலக்டபில் டார்க் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இது சிறப்பான டிராக்ட்ஷன் கண்ட்ரோல் வழங்க உதவும்.

பிரேக்கிங்கை பொருத்தவரை ஸ்கூட்டரின் முன்புறம் 256 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் வழங்கப்படுகிறது. இவற்றுடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.

இதுதவிர எலெக்ட்ரிக்கல் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட விண்ட்ஸ்கிரீன், எல்.இ.டி. ஹெட்லேம்ப், பிரத்யேக எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பிரீமியம் ஸ்விட்ச்கியர், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News