ஆட்டோமொபைல்
டாடா சபாரி

மீண்டும் விற்பனைக்கு வரும் டாடாவின் கெத்தான கார்

Published On 2021-01-06 11:39 GMT   |   Update On 2021-01-06 11:39 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கெத்தான கார் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வர இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சபாரி மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், அந்த விழாவில் இந்த மாடல் கிராவிடாஸ் என அழைக்கப்பட்டது.

புதிய டாடா சபாரி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் சில விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.



இந்திய சந்தையில் டாடா சபாரி மாடல் இரண்டு தலைமுறைகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இது அதிக பிரபலமான எஸ்யுவி மாடலாகவும் விளங்கியது. அந்த வகையில், இந்த மாடல் அசத்தலான புது அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த எஸ்யுவி மாடல் இம்பேக்ட் 2.0 டிசைன் மற்றும் OMEGARC பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், க்ரியோடெக் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இது 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Tags:    

Similar News