search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • 2.5 லட்சம் பார்ச்சூனர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
    • வெளிப்புறம், உள்புறத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் எஸ்.யு.வி. மாடலின் புது வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புது வெர்ஷன் பார்ச்சூனர் லீடர் எடிஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த வெர்ஷன் 4x2 வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

    பார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலில் டூயல் டோன் வெளிப்புற பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக்டு அவுட் அலாய் வீல்கள், வயர்லெஸ் சார்ஜர், TPMS, முன்புறம்-பின்புறம் பம்ப்பர் ஸ்பாயிலர்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் சூப்பர் வைட் மற்றும் பிளாக் ரூஃப், பிளாட்டினம் பியல் வைட் மற்றும் பிளாக் ரூஃப், சில்வர் மெட்டாலிக் மற்றும் பிளாக் ரூஃப் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2.5 லட்சம் பார்ச்சூனர் யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பார்ச்சூனர் லீடர் எடிஷன் மாடலின் விலையை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் அக்சஸரீக்களுக்கு ஏற்ற வகையில், காரின் விலை வேறுப்படும்.

    எனினும், தற்போது விற்பனை செய்யப்படும் பார்ச்சூனர் ஸ்டான்டர்டு எடிஷன் உடன் ஒப்பிடும் போது லீடர் எடிஷன் மாடலின் விலை ரூ. 35 லட்சத்து 93 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 38 லட்சத்து 21 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • பல்சர் ns200 சீரிசை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
    • ரிடியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படலாம்.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதுவரை தான் உருவாக்கியதிலேயே அதிக சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிள் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை பஜாஜ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.

    அந்த வகையில் பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த பல்சர் மோட்டார்சைக்கிள் மே 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பல்சர் மோட்டார்சைக்கிளின் திறன் எப்படி இருக்கும் என்பது டீசரில் தெரியவந்துள்ளது. இந்த பைக் பல்சர் ns200 சீரிசை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய பல்சர் பைக்கில் கே.டி.எம். 390 டியூக் அல்லது டாமினர் 400 மாடல்களில் உள்ள என்ஜினின் ரிடியூன் செய்யப்பட்ட வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜின் எதுவாயினும், அதன் திறன் 40 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    இதுதவிர புதிய பல்சர் பைக்கில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் பிரீலோடு அட்ஜஸ்ட் வசதி கொண்ட மோனோஷாக் யூனிட் வழங்கப்படலாம். பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 மில்லிமீட்டர், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படலாம். இந்த மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    • கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.
    • பொலிரோ நியோ, ஹோண்டா அமேஸ் மாடல்களும் பங்கேற்றன.

    கியா நிறுவனத்தின் கரென்ஸ் எம்.பி.வி. மாடல் சமீபத்தில் குளோபல் என்கேப் (GNCAP) டெஸ்டிங்கில் பங்கேற்றது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த டெஸ்டிங்கில் கரென்ஸ் மட்டுமின்றி மஹிந்திரா பொலிரோ நியோ மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களும் பங்கேற்றன.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இதே போன்ற டெஸ்டிங்கில் பங்கேற்ற போது கியா கரென்ஸ் மாடல் மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது. தற்போது மேம்பட்ட விதிமுறைகளின் கீழ் கியா கரென்ஸ் மாடல் மீண்டும் டெஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது.

     


    இரண்டு முறை டெஸ்டிங் செய்யப்பட்ட கியா கரென்ஸ் மாடல் முதல் முறை ஒரு நட்சத்திர குறியீட்டை கூட பெறவில்லை. இந்த காரில் பயணிப்போருக்கு கழுத்து பகுதியில் அதிக காயங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் கரென்ஸ் மாடல் டெஸ்டிங் செய்யப்பட்டது. அப்போது இந்த கார் பாதுகாப்பிற்காக மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்றது.

    இறுதி முடிவுகளின் படி கியா கரென்ஸ் மாடல் பெரியவர்கள் பாதுகாப்பில் 34-க்கு 22.07 புள்ளிகளையும், சிறியவர்கள் பாதுகாப்பிற்கு 49-க்கு 41 புள்ளிகளையும் பெற்றது. இந்த காரில் ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லிமிட்டர்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் சிஸ்டம், இ.எஸ்.சி. மற்றும் ISOFIX உள்ளிட்டவை ஸ்டான்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

    • ஸ்கிராம்ப்ளர் 650 மற்றும் கிளாசிக் 650 மாடல்கள் இணைகிறது.
    • இருமடங்கு அதிகப்படுத்தும் முயற்சியில் ராயல் என்பீல்டு ஈடுபடுகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைய நிதியாண்டிலேயே ஆறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் முற்றிலும் புதிய மாடல்கள் மற்றும் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்படும் மாடல்கள் அடங்கும்.

    புதிதாக உருவாக்கப்படும் 450சிசி பிரிவில் குயெரில்லா 450 நியோ ரெட்ரோ ரோட்ஸ்டர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹிமாலயன் 450 மாடலுடன் இணைய இருக்கிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    650சிசி பிரிவில் கோன் கிளாசிக் 650 மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒற்றை இருக்கை கொண்ட பாபர் மாடல் கிளாசிக் 350 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. ஃபிளாக்ஷிப் 650சிசி பிரிவில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஷாட்கன் 650 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் ஸ்கிராம்ப்ளர் 650 மற்றும் கிளாசிக் 650 மாடல்கள் இணையும் என்று தெரிகிறது.

    இந்த நிதியாண்டில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதன் மூலம் சந்தையில் தனது பங்குகளை இருமடங்கு வரை அதிகப்படுத்தும் முயற்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபடுகிறது.

    • பனிகேல் V4 S மாடலின் விலை ரூ. 2.2 லட்சம் அதிகம் ஆகும்.
    • இந்த பைக்கில் டூயல் பீம் அலுமினியம் ஃபிரேம் உள்ளது.

    அப்ரிலியா நிறுவனத்தின் RSV4 ஃபேக்டரி மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய அப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்கின் விலை ரூ. 31 லட்சத்து 26 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக அப்ரிலியா RSV4 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    பிளாக்ஷிப் மாடல் என்பதால் RSV4 ஃபேக்டரி மாடலில் ரேசிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ், சக்திவாய்ந்த என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் அப்ரிலியா RSV4 ஃபேக்டரி மாடல் டுகாட்டி நிறுவனத்தின் பனிகேல் V4 S மாடலுக்கு போட்டியாக அமைகிறது. டுகாட்டி பனிகேல் V4 S மாடலின் விலை ரூ. 2.2 லட்சம் அதிகம் ஆகும்.

     


    புதிய RSV4 ஃபேக்டரி மாடலில் 1099 சிசி, V4 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 214 ஹெச்.பி. பவர், 125 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் பீம் அலுமினியம் ஃபிரேம் மற்றும் அசத்தலான ஸ்விங் ஆர்ம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 43 மில்லிமீட்டரில் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒலின்ஸ் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் எலெக்ட்ரிக் முறையில் இயக்கப்படும் மோனோஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 17.9 லிட்டர்கள் ஃபியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    • வரும் மாதங்களில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
    • இந்த வேரியண்ட் பல நிறங்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் எஸ்.யு.வி.-இன் மைல்டு ஹைப்ரிட் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த மாடல் தென் ஆப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பார்ச்சூனர் MHEV மாடலில் உள்ள மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹிலக்ஸ் MHEV மாடலில் உள்ளதை போன்றதாகும்.

    தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து பார்ச்சூனர் மைல்டு ஹைப்ரிட் மாடல் வரும் மாதங்களில் மற்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் பார்க்க வழக்கமான பார்ச்சூனர் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த வேரியண்ட் பல நிறங்களில் கிடைக்கிறது.

     


    ஹிலக்ஸ் மைல்டு ஹைப்ரிட் போன்றே பார்ச்சூனர் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 16 ஹெச்.பி. பவர், 42 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள என்ஜின் 201 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பார்ச்சூனர் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன் 5 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. இத்துடன் இந்த என்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. மேலும் 2WD மற்றும் 4WD வசதி வழங்கப்படுகிறது.

    • புதிய எஸ்.யு.வி. மாடல் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொலிரோ நியோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்தது. மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட பொலிரோ நியோ பிளஸ் எஸ்.யு.வி. தற்போது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த கார் 2-3-4 இருக்கை அமைப்புடன் மொத்தம் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. பொலிரோ நியோ பிளஸ் மாடல் P4 மற்றும் P10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     


    பொலிரோ நியோ பிளஸ் 7 சீட்டர் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது புதிய நியோ பிளஸ் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    புதிய எஸ்.யு.வி. மாடல்- நபோலி பிளாக், மஜெஸ்டிக் சில்வர் மற்றும் டைமண்ட் வைட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் கேபினில் பிரீமியம் இத்தாலிய இண்டீரியர்கள், 9 இன்ச் அளவில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத், யு.எஸ்.பி. கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் மாடலில் புதிய 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • இந்த கார் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
    • 2024 ஸ்விப்ட் மாடல் ஆறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் நான்காம் தலைமுறை மாருதி ஸ்விப்ட் மாடல் காரை மே மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காரின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்பாகவே 2024 ஸ்விப்ட் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலை பயனர்கள் ரூ. 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய ஸ்விப்ட் மாடல்- புளூ, ரெட், வைட், சில்வர், பிளாக் மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கலாம்.

    2024 மாருதி ஸ்விப்ட் மாடலின் முன்புறம், பின்புறம் புதிய பம்ப்பர்கள், புதிய டிசைன், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், பின்புற வைப்பர் மற்றும் வாஷர், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் இந்த கார் 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் இந்த கார் முற்றிலும் புதிய என்ஜின் கொண்டிருக்குமா அல்லது பழைய 1.2 லிட்டர் K12C என்ஜினுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • இரு மாடல்களிலும் ஆஃப் ரோடு ரைடிங் வசதி உள்ளது.
    • இரு மாடல்களும் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    டிரையம்ப் இந்தியா நிறுவனம் 2024 டைகர் 900 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிள் GT மற்றும் ரேலி ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டைகர் 900 GT மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 95 ஆயிரம் என்றும் ரேலி ப்ரோ மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை 2024 டிரையம்ப் டைகர் 900 ரேலி ப்ரோ மற்றும் டைகர் 900 GT மாடல்களில் உயர்த்தப்பட்ட ஸ்டான்ஸ் (பைக் ஓட்டும் போது கால் வைக்கும் இடம்) வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இரு மாடல்களும் ஆஃப் ரோடு ரைடிங், நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், ரேலி ப்ரோ மாடலில் ஆஃப் ரோடிங் சற்று சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிகிறது.

    புதிய டைகர் 900 ரேலி ப்ரோ மாடல்- கார்பன் பிளாக், ஆஷ் கிரே மற்றும் மேட் காக்கி என மூன்று நிறங்களிலும் GT மாடல்- கிராஃபைட், ஸ்னோடோனியா வைட் மற்றும் கார்னிவல் ரெட் என மூன்று நிறங்களிலும் கிடைக்கின்றன.

    2024 டிரையம்ப் டைகர் 900 மாடலில் இன்லைன், மூன்று சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு, 888சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 106.5 ஹெச்.பி. பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • வாகனங்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்தது.

    கியா நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அந்நிறுவன எதிர்கால திட்டங்களை அறிவித்தது. அப்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தது.

    அந்த வகையில், கியா நிறுவனம் 2024-25 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வரிசையில் கியா EV9 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் 541 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ள கியா EV9 இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம்.

     


    கியா EV9 மாடல் தவிர புதிய தலைமுறை கியா கார்னிவல் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்த கார் ஏழு மற்றும் ஒன்பது பேர் பயணம் செய்யக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும்.

    இரு மாடல்களுடன் கியா எலெக்ட்ரிக் RV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த கார் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளது. எனினும், இந்த கார் கரென்ஸ் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும்.

    • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    • புது வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. இன்னோவா ஹைகிராஸ் GX(O) என்று அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்ட்-க்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புது வேரியண்டில் எல்.இ.டி. ஃபாக் லைட்கள், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் டிஃபாகர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் செஸ்ட்நட் இன்டீரியர், மென்மையான பொருட்களால் ஆன டேஷ்போர்டு, டோர் பேனல்கள் மற்றும் பின்புற சன்ஷேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

     


    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் GX(O) மாடல்: பிளாகிஷ் அகெ கிளாஸ் ஃபிளேக், பிளாட்டினம் வைட் பியல், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்லிங் பிளாக் பியல் க்ரிஸ்டல் ஷைன், சில்வர் மெட்டாலிக், சூப்பர் வைட் மற்றும் அவான்ட் கார்ட் பிரான்ஸ் மெட்டாலிக் என ஏழுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2024 இன்னோவா ஹைகிராஸ் மாடலின் GX(O) வேரியண்டில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்.பி. பவர், 188 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    • வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய EMP திட்டம் காரணமாக மற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பு காரணமாக ஓலா நிறுவனத்தின் S1 X 2 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 69 ஆயிரத்து 999 என குறைந்து இருக்கிறது. S1 X 3 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 999 என குறைந்துள்ளது.

     


    இந்த சீரிசில் டாப் எண்ட் S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 99 ஆயிரத்து 999 என குறைந்தது. ஓலா S1 X சீரிஸ் மாடல்களின் வினியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஓலா S1 X சீரிஸ் விலை குறைந்துள்ள நிலையில், S1 X பிளஸ், S1 ஏர் மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஓலா S1 X பிளஸ் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் S1 ஏர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம், S1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×