தொழில்நுட்பம்

மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. பிரீமியர் தேதி அறிவிப்பு

Published On 2019-01-24 05:38 GMT   |   Update On 2019-01-24 05:38 GMT
டச் ஸ்கிரீன் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக புதிய அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதை டீசர் வீடியோ மூலம் எல்.ஜி. நிறுவனம் அறிவித்துள்ளது. #LG #MWC2019



சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் எல்.ஜி. பிரீமியர் நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் என எல்.ஜி. அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டீசர் வீடியோ வடிவில் எல்.ஜி. நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது.

எல்.ஜி. வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் டச் தொழில்நுட்பத்திற்கு விடைகொடுத்து ஜெஸ்ட்யூர்களை அறிமுகம் செய்யும்படியான வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதே நிகழ்வில் எல்.ஜி. தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஜி8 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



எல்.ஜி. ஜி8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், QHD பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், குவாட் DAC, கிளாஸ் பேக் மெட்டல் ஃபிரேம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கேன்டிலீவர்-கன்டக்ஷன் ஸ்பாக்கர் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 

சமீபத்தில் வெளியான தகவல்களில் எல்,ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என என கூறப்பட்டது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.ஜி. வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,


Tags:    

Similar News