ட்விட்டரில் இருந்து தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் சுமார் 1,43,000 செயலிகள் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #TwitterPurge
1.43 லட்சம் செயலிகள் ட்விட்டரில் இருந்து அதிரடியாக நீக்கம்
பதிவு: ஜூலை 25, 2018 15:05
கோப்பு படம்
ட்விட்டர் தளத்தில் போலி செயலிகள் இடம்பெறாமல் இருக்க பல்வேறு மாற்றங்களை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக பயனர்களுக்கு கெட்ட செயலிகளை குறிப்பிடும் வசதியும் வழங்கப்படுகிறது.
கெட்ட செயலிகள் தளத்தை பயன்படுத்துவோரின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும். ட்விட்டரின் வழக்கமான API-க்களை இயக்க முதன்முறையாக அனுமதி கோரும் டெவலப்பர்கள் தங்களது செயலிகளை பதிவு செய்ய புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யும் டெவலப்பர்கள் தங்களது முழு விவரங்களுடன் ட்விட்டர் API-க்களை எவ்வாறு பயன்படுத்த இருக்கின்றனர் என்ற விவரங்களையும், இவ்வாறு பயன்படுத்துவது பயனுரின் அனுபவத்தை எந்த வகையில் சிறப்பானதாக மாற்றும் என்பதை விரிவாக வழங்க வேண்டும்.
>கோப்பு படம்
புதிய வழிமுறைகளின் கீழ் ட்விட்டர் API-க்களை பயன்படுத்த டெவலப்பர்கள் சில புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் என்றாலும், தொடர்ந்து டெவலப்பர்களுக்கு உயர்-ரக, விதிமுறைகளுக்குள் சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என ட்விட்டர் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் டெவலப்பர்களும் தங்களது API-க்களை இயக்க புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கான நேரத்தை ட்விட்டர் சரியாக குறிப்பிடவில்லை, என்றாலும் டெவலப்பர்கள் புதிய வழிமுறைகளை துவங்கும் முன் 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் 1,43,000 செயலிகளும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #TwitterPurge