செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்புப் படை வேட்டையில் 18 பேர் கொல்லப்பட்டனர்

Published On 2019-06-07 11:39 GMT   |   Update On 2019-06-07 11:39 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் முஹம்மத் அகா மாவட்டத்தில் இன்று பயங்கரவாத ஒழிப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்புப் கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.



முஹம்மத் அகா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாத ஒழிப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்-இ-ஆலம் பகுதியில் நடந்த இந்த தாக்குதலின்போது இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
Tags:    

Similar News