செய்திகள்

மோடியுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணிபுரியும்- டிரம்ப் நிர்வாகம் உறுதி

Published On 2019-05-29 10:26 GMT   |   Update On 2019-05-29 10:26 GMT
அமெரிக்காவின் மிகப்பெரிய நட்பு நாடான இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற அந்நாட்டின் அதிபர் தலைமையிலான அரசு நிர்வாகம் மீண்டும் உறுதி அளித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்டாகஸ் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலில் அமைதியாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் சிறப்பாக நடைபெறுகிறது. தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மோடிக்கும், அவரது பா.ஜனதா கட்சிக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெளியுறவு மந்திரி மைக் பால்பியோ உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகம் வாழ்த்து செய்தி அனுப்பியது.

இந்தியா அமெரிக்காவின் மிகப்பெரிய நட்புநாடு. எனவே அமெரிக்கா பிரதமர் மோடியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும். முக்கிய பிரச்சனைகள் குறித்து வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ மிகவும் அதிதீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


பிரதமர் மோடியின் வெற்றியை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க எம்.பி.க்கள், மூத்த அரசு அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை 50 எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள், மூத்த அரசு அதிகாரிகள் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

அமெரிக்காவின் வலுவான நட்பு நாடாக இந்தியா தொடர்கிறது. தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு வாழ்த்துக்கள். தங்கள் நட்பு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என அமெரிக்காவாழ் இந்தியரும் அரசியல்வாதியுமான நிக்கிஹாலே டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News