செய்திகள்

நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது அமெரிக்கா

Published On 2019-05-29 07:29 GMT   |   Update On 2019-05-29 08:29 GMT
நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கருவூலத்துறை உலகம் முழுக்க உள்ள சில முக்கிய ரூபாய்களை அந்நாட்டின் கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது.

அதன்படி எந்த நாட்டு கரன்சி எல்லாம் உலகில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த நாட்டைச் சேர்ந்த கரன்சி மட்டுமே இந்த வரிசை பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும்.



அந்த ரூபாயின் சர்வதேச மதிப்பு மற்றும் தாக்கத்தை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும். அந்த வகையில் சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் பணம் அமெரிக்காவின் இந்த பட்டியலில்  உள்ளது. இந்திய ரூபாயும் இந்தப் பட்டியலில் இருந்து வந்தது.

ஆனால், அமெரிக்காவின் சில முக்கிய கவலைகளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைந்து இருப்பதையடுத்து, நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட்டு இருப்பதாக, அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், சுவிட்சர்லாந்தும் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளை நாணய கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News