செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இரு தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2019-05-26 16:22 GMT   |   Update On 2019-05-26 16:22 GMT
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் இரு தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகளை அரசுப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள காக்ரிஸ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கூட்டுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் குலாம் மற்றும் முஸ்தபா என்ற இரு தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகளை அரசுப் படையினர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News