செய்திகள்

போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி

Published On 2019-05-22 12:27 GMT   |   Update On 2019-05-22 12:27 GMT
இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.
புதுடெல்லி:

இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறி விலகிச் சென்றும் தாக்கும் ஆற்றல் படைத்தது.



கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று ஏவி பிரமோஸ் ஏவுகணை இன்று பரிசோதிக்கப்பட்டது.

இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாககவும்  பிரமோஸ் ஏவுகணைவெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாககவும் இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News