ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மாநாட்டில் பங்கேற்க பிஷ்கெக் நகருக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பேக்கோவ்-ஐ சந்தித்தார். இந்தியா-கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர், சீனா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை உயரதிகாரிகளுடன் சுஷ்மா உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் விரிவான ஆலோசனை நடத்தினர்.