செய்திகள்

திப்பு சுல்தான் நினைவு நாள் - இம்ரான் கான் புகழாரம்

Published On 2019-05-05 23:38 GMT   |   Update On 2019-05-06 01:02 GMT
திப்பு சுல்தான் நினைவு நாளையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார். #Pakistan #ImranKhan #DeathAnniversary
இஸ்லாமாபாத்:

திப்பு சுல்தான் நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.



அதில், “அடிமையாக வாழ விரும்பாமல் போராடி மடிந்தவர் திப்பு சுல்தான். அவர் விடுதலையையே விரும்பினார். அதனால் அவரை நான் நேசிக்கிறேன்” என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசும்போதும் திப்பு சுல்தானுக்கு இம்ரான் கான் புகழாரம் சூட்டினார்.  #Pakistan #ImranKhan #DeathAnniversary 
Tags:    

Similar News