செய்திகள்

லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடி மூன்றாவது முறையாக ஜாமின் மனு தாக்கல் - 8-ம் தேதி விசாரணை

Published On 2019-05-01 11:44 GMT   |   Update On 2019-05-01 11:44 GMT
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் மூன்றாவது ஜாமின் மனு வரும் 8-ம் தேதி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. #NiravModi #WestminsterCourt #NiravModibail
லண்டன்:

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
 
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
 
அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் இரண்டாவது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்த மனுமீது விசாரணை நடந்தபோது சிறையில் இருந்த நிரவ் மோடி வீடியோ கான்பிரன்சிங் முறையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்றாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி எம்மா அர்புத்நாட் வழக்கின் மறுவிசாரணையை மே 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துடன், நிரவ் மோடியின் சிறைக்காவலையும் மே 24-ம் தேதிவரை நீடித்து உத்தரவிட்டார். 

இந்நிலையில், நிரவ் மோடியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது ஜாமின் மனு மீது வரும் 8-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. #NiravModi #WestminsterCourt #NiravModibail
Tags:    

Similar News