செய்திகள்

பலத்த மழை எதிரொலி - கனடாவில் வெள்ளம் காரணமாக மக்கள் வெளியேற்றம்

Published On 2019-04-22 13:20 GMT   |   Update On 2019-04-22 13:20 GMT
கனடாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். #CanadaFlooding
மாண்ட்ரியல்:

வடஅமெரிக்க நாடான கனடாவின் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. உறைந்து கிடந்த பனியும் உருகத்தொடங்கியது.

இதன் காரணமாக கியூ பெக் மற்றும் நியூ புரூன்ஸ்விக் ஆகிய பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கியூபெக் பகுதியில் ஓடும் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் கடை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் ஒட்டாவா, பியூஸ், கியூபிக் நகரங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 1500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

வெள்ளம் பாதித்த பகுதியில் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நியூபெக்கில் மட்டும் 200 ராணுவ வீரர்களும், ஒட்டாவாவில் 400 பேரும் முகாமிட்டுள்ளனர். இவை தவிர நியூ புரூன்ஸ்விக்கில் 120 கூடுதல் ராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டாவாவில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். அவரது காரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. #CanadaFlooding
Tags:    

Similar News