செய்திகள்

நாடு கடத்த தடை விதிக்க முடியாது- மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்தது பிரிட்டன் ஐகோர்ட்

Published On 2019-04-08 10:35 GMT   |   Update On 2019-04-08 10:49 GMT
பிரிட்டனில் இருந்து தன்னை நாடு கடத்த தடை விதிக்கக் கோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பிரிட்டன் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
லண்டன்:

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பிரிட்டனில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.



இந்த உத்தரவுக்கு எதிராக விஜய் மல்லையா, பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவரது மேல்முறையீட்டு மனுவையும் இன்று தள்ளுபடி செய்தது. இதனால், மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  #VijayMallya #Mallyafiles #Mallyaextradition #extraditionorder
Tags:    

Similar News