செய்திகள்
மாலி நாட்டில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 16 வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் இன்று நடத்திய ஆவேச தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்தனர். #Maliarmycampattack #Maliarmycamp
பமாக்கோ:
மாலி நாட்டின் பல பகுதிகளில் முன்னர் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்துவந்த பல்வேறு ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுவினர் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை நடத்த வேண்டும் என்ற வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாலி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள முப்போட்டி பிராந்தியத்தின் டியோரா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தாக்குதலில் அந்த முகாம் முழுவதும் தீக்கிரையானது. இதில் 16 வீரர்கள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Maliarmycampattack #Maliarmycamp