செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவம், பயங்கரவாதிகள் இடையே மோதல் - 15 பேர் பலி

Published On 2019-02-01 11:57 GMT   |   Update On 2019-02-01 11:57 GMT
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படைவீரர்கள் உள்பட 15 பேர் பலியாகினர். #Afghanistan #Taliban
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கில் அமைந்துள்ள சாரி புல் மாகாணத்தின் சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தலிபான் பயங்கரவாதிகள் சோதனை சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில் தலிபான் பயங்கரவாதிகள் 9 பேரும்,  6 ராணுவ வீரர்களும் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #Taliban
Tags:    

Similar News