செய்திகள்

இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்

Published On 2018-10-26 22:23 GMT   |   Update On 2018-10-26 22:23 GMT
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. #ranilwickremesinghe #rajapaksa #Rajapaksa #SriLanka #US
வாஷிங்டன்:

இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசின் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிபர் பிரதமரை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கை அரசு மனித உரிமைகள், நாட்டின் சீர்திருத்தம், நீதி, சமரசம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. #ranilwickremesinghe #rajapaksa #Rajapaksa #SriLanka #US
Tags:    

Similar News