செய்திகள்

ஏமன் நாட்டில் சவுதி விமானப் படை தாக்குதலில் 15 பேர் பலி

Published On 2018-10-14 21:55 GMT   |   Update On 2018-10-14 21:55 GMT
ஏமன் நாட்டில் சவுதி விமானப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Yemenclashes
சனா:

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஹோடேய்டா மாகாணத்தில் உள்ள ஜபால் ராஸ் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது திடீர் வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குலுக்கு ஏமனில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். #Yemenclashes
Tags:    

Similar News