செய்திகள்

புதுச்சேரி மத்திய சிறையில் சோதனை- 6 செல்போன்கள் பறிமுதல்

Published On 2019-06-12 05:06 GMT   |   Update On 2019-06-12 05:06 GMT
புதுச்சேரி மத்திய சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கைதிகளின் அறைகளில் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாகவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் தலைமையில், சிறைக்குள் சோதனை நடத்தப்பட்டது.



கைதிகள் தங்கியிருந்த அறைகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 6 செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன் பயன்படுத்தியதாக 2 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News