செய்திகள்
சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை வகித்தார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் சதவீதம் குறித்து நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் காலங்களில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.
அடுத்து வரும் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் பெருவாரியான வெற்றிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை வகித்தார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மாவட்ட வாரியாக கட்சிக்கு கிடைத்த வாக்குகள் சதவீதம் குறித்து நிர்வாகிகளுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் காலங்களில் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது குறித்து விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.
அடுத்து வரும் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் பெருவாரியான வெற்றிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.