செய்திகள்

பல்லடத்தில் புதுப்பெண் கணவர் வீட்டு முன் தர்ணா

Published On 2019-05-29 11:05 GMT   |   Update On 2019-05-29 11:05 GMT
பல்லடத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் கணவர் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). இவர் திவ்யா (24) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

காதல் திருமணத்துக்கு ஆனந்த் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஏற்றுக் கொண்டனர்.

திவ்யா பல்லடத்தில் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆனந்த் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதில் திவ்யாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆனந்த் கூறினார். இதற்கு ஆதரவாக அவரது பெற்றோர் நாகராஜ், விசாலாட்சி ஆகியோர் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட திவ்யா தனது கணவர் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து நியாயம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆகியோர் ஆனந்த் குடும்பத்தினரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்வதாக கூறினர்.

இதனையடுத்து தர்ணா போராட்டதை கைவிட்ட திவ்யா கணவருடன் வீட்டுக்கு சென்றார்.

Tags:    

Similar News