செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு- தென்காசி, திருநெல்வேலியில் திமுக வேட்பாளர்கள் வெற்றி

Published On 2019-05-24 09:48 GMT   |   Update On 2019-05-24 09:48 GMT
பாராளுமன்ற தேர்தலில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

திருநெல்வேலி தொகுதியில் 15,46,212 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,31,547 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஞானதிரவியம் 5,22,623 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,37,166 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் 62 ஆயிரத்து 209 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 49 ஆயிரத்து 898 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வெண்ணிமலை 23 ஆயிரத்து 100 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 14,88,944 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 10,56,841 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தனுஷ் எம்.குமார் 4,70,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ணசாமி 3,54,216 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் 91 ஆயிரத்து 130 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் 58 ஆயிரத்து 855 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முனீஸ்வரன் 23 ஆயிரத்து 844 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
Tags:    

Similar News