செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு- நாகையில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி

Published On 2019-05-24 09:19 GMT   |   Update On 2019-05-24 09:19 GMT
நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர் செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நாகை:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் தொகுதியில் 13,03,060 மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 9,95,947 வாக்குகள் பதிவானது.

தி.மு.க. கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட செல்வராசு 5,05,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் 3,02,520 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அமமுக வேட்பாளர் செங்கொடி 68 ஆயிரத்து 451 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதி 50 ஆயிரத்து 091 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குருவையார் 14 ஆயிரத்து 077 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
Tags:    

Similar News