செய்திகள்
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தோற்கடித்தார்.
திருச்சி:
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருச்சி தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் களமிறங்கினார்.
திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 65 ஆயிரத்து 286 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜா 42 ஆயிரத்து 134 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் திருச்சி தொகுதியில் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் களமிறங்கினார்.
திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,999 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் 1,00,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 65 ஆயிரத்து 286 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜா 42 ஆயிரத்து 134 வாக்குகளும் பெற்றுள்ளனர்.