செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் முடிவு- ஸ்ரீபெரும்புதூரில் டிஆர் பாலு வெற்றி

Published On 2019-05-24 06:28 GMT   |   Update On 2019-05-24 07:08 GMT
பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.
ஸ்ரீபெரும்புதூர்:

தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22,53,041, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,88,666 வாக்குகள் பதிவானது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,91,220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,69,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 53,027, அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் 25,804, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் 80,058 வாக்குகள் பெற்றுள்ளனர். 
Tags:    

Similar News