செய்திகள்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

Published On 2019-05-23 08:46 GMT   |   Update On 2019-05-23 08:46 GMT
தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் 5-வது சுற்று முடிவில் 67 ஆயிரத்து 849 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து நடந்து வரும் ஓட்டு எண்ணிக்கையில் அவர் அதிக ஓட்டுக்கள் வாங்கி முன்னிலையில் உள்ளார்.
நாமக்கல் :

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன், தி.மு.க. கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், அ.ம.மு.க. சார்பில் சாமிநாதன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவேல் உள்பட மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.

இன்று காலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ், அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதல் ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

முதல் சுற்று முடிவில் சின்ராஜ் 15 ஆயிரத்து 106 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

5-வது சுற்று முடிவில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் 67 ஆயிரத்து 849 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து நடந்து வரும் ஓட்டு எண்ணிக்கையில் அவர் அதிக ஓட்டுக்கள் வாங்கி முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News