செய்திகள்

கடனை திருப்பி தருவதாக கூறி பெண்ணை உல்லாசம் அனுபவித்து படம் எடுத்து மிரட்டிய வாலிபர்

Published On 2019-05-16 14:45 GMT   |   Update On 2019-05-16 14:45 GMT
கடனை திருப்பி தருவதாக பெண்ணை அழைத்து உல்லாசமாக இருந்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் சசிகுமார் (வயது 30). அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த மல்லிகா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

மல்லிகாவிடம் சசிகுமார் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை பல முறை கேட்டு பார்த்தும் அவர் தரவில்லை. சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் மல்லிகா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார்.

மல்லிகாவிடம் வத்தலக்குண்டுவுக்கு வந்தால் பணத்தை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதனை நம்பி அவர் வத்தலக்குண்டு வந்துள்ளார். பின்னர் தனியார் லாட்ஜில் அவரை வரவழைத்து அங்கு மிரட்டி கற்பழித்தார்.
அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். இனிமேல் தன்னிடம் பணம் கேட்டால் இந்த படத்தை உனது கணவரிடமும், ஊரில் உள்ளவர்களிடமும் காட்டி விடுவதாக மிரட்டினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
Tags:    

Similar News