செய்திகள்

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2019-05-01 07:40 GMT   |   Update On 2019-05-01 07:40 GMT
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. #MedrasHC
சென்னை:

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த விசாரணையில் நீதிபதி, தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் தேர்வு எழுதாத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க 2 வாரங்களில்  நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தேர்வு எழுதாத சுமார் 1500 பேருக்கு ஊதியம் கொடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,  நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.  மேலும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் தகுதித்தேர்வு எழுதாமல் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கருணை காட்டக்கூடாது எனவும் கூறியுள்ளது. #MedrasHC

Tags:    

Similar News