செய்திகள்

மே 5-ந்தேதி ராயப்பேட்டை மைதானத்தில் வணிகர் தின மாநாடு- விக்கிரமராஜா ஆலோசனை

Published On 2019-04-25 10:25 GMT   |   Update On 2019-04-25 10:25 GMT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார். #vikramaraja #vanigarsangam

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மே 5-ந்தேதி ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான வியாபாரிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளுடனும் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேரமைப்பின் வட சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் மே 5 வணிகர் தின ஆலோசனை கூட்டம் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு சண்முகா மஹாலில் மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அனைத்து சங்கங்களும் முழு ஒத்துழைப்பு தந்து பேரமைப்பு நடத்தும் 36-வது மாநில மாநாட்டை வெற்றிகரமான மாநாடாக அமைய அனைவரும் பல்லாயிரக்கணக்கான வணிகர்களுடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில இணைச் செயலாளர் எஸ்.எம்.பி.செல்லத்துரை, மாவட்ட தலைவர்கள் சாமுவேல், ஆதி குருசாமி, ஜெயபால், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ.சங்கர், பொருளாளர் ஜெய்சங்கர், அமைப்புச் செயலாளர் குணசேகரன்,

மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பால்ராஜ், செல்வக்குமார், லட்சுமண ராவ், ரவிசெல்வம், புருசோத்தமன், அன்னைபாபு, முருகேசன், செல்வராஜ் பங்கேற்றனர்.

அனைவரையும் கொளத்தூர் பூம்புகார்நகர் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் வி.பி.வில்லி யம்ஸ் வரவேற்க வி.சால மோன்ராஜா நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் கொரட்டூர் த.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார்.

முன்னதாக செரிமனி ஓட்டலில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 5-ந்தேதி 36-வது மாநில மாநாடு இந்திய வணிகர் எழுச்சி மாநாடாக நடைபெறுகிறது.

வணிகர்களுக்கு பென்ஷன் தருவது, ரூ.10 லட்சம் விபத்து காப்பீட்டுத் திட்டம், வணிகர் நல வாரியம் அமைத்தல், பிணையில்லா ரூ.50 லட்சம் கடன் உதவித் திட்டம், வணிகர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அளிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை எங்களது பேரமைப்பு வரவேற்கிறது.

மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் இந்த திட்டங்களை உறுதியாக நிறைவேற்றிட பேரமைப்பு போராடும்.

இவ்வாறு அவர் கூறினார். #vikramaraja #vanigarsangam

Tags:    

Similar News