செய்திகள்

மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2019-02-23 06:17 GMT   |   Update On 2019-02-23 06:17 GMT
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அமீர் அகமது சென்னை கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரது நண்பர் மிர்சாஅலி ஓ.எம்.ஆரில் உள்ள கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

இவர்கள் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சென்னை அரும்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்று நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி இருளர்கள் காலனி அருகே வந்தபோது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அமீர் அகமதும் மிர்சா அலியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

மிர்சா அலி இன்னும் ஓரிரு மாதத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News