வருகிற தேர்தல் மூலம் நாட்டை விட்டு வெளியேறுவது யார்? என்று தெரியும்- கமலுக்கு கடம்பூர்ராஜூ சவால்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு அறிவித்த பட்ஜெட் மணம் கொண்டது என டி.டி.வி. தினகரன் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார். பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் வீடியோ பைரசியை ஒழிக்க முடியும்.
திராவிட இயக்கங்களை பற்றி கருத்துக் கூற நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. திராவிட இயக்கத்தின் வரலாறு, பாரம்பரியத்தை அறியாதவர். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறினார்.
தேர்தல் முடியும் போது யார் நிலைத்து நிற்பார்கள், யாரை ஊரை விட்டு போகிறார்கள், யார் நாட்டை விட்டு போகிறார்கள் என்பது முடிவுக்கு வரும். கமல்ஹாசன் நிலை இல்லாத கருத்து கொண்டவர்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #kadamburraju #kamal #parliamentelection