செய்திகள்

திருவள்ளூர்-காஞ்சீபுரத்தில் குடியரசு தின விழா

Published On 2019-01-26 08:10 GMT   |   Update On 2019-01-26 08:10 GMT
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் பொன்னையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார். #RepublicDay
திருவள்ளூர்:

திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 115 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

மேலும் விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 34 போலீசாருக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் பொன்னி மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் லோகநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் குமார், சுகாதார துறை இணை இயக்குனர் தயாளன்,முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்ரெண்ட் சிலம்பரசன், சப்-கலெக்டர் ரத்தினா, திருவள்ளூர் துணை சூப்ரெண்ட் கங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியரசு விழா நடைபெற்றது. தேசியக்கொடியை கலெக்டர் பொன்னையா ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார், பின்னர் ஊர்க் காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், சாரண சாரணியர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர் உலக அமைதியை குறிக்கும் வகையினில் புறாக்களையும் தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

பின்னர் முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு திருமண மானிய உதவித் தொகை, விலையில்லா மூன்று சக்கர மற்றும் சக்கர நாற்காலிகள், சலவைப் பெட்டிகள், எம்ப்ராய்டிங் தையல் மிஷின்கள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் மாவட்ட அளவில் நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் என 35 லட்சத்து 16 ஆயிரத்து 284 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 159 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், தாசில்தார் காஞ்சனமாலா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #RepublicDay

Tags:    

Similar News