செய்திகள்
சித்தூரில் பைக்-டிராக்டர் மோதல் - தமிழக வாலிபர்கள் 3 பேர் பலி
சித்தூரில் பைக்-டிராக்டர் மோதலில் தமிழக வாலிபர்கள் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டை சேர்ந்தவர்கள் முரளி, திருமலை, விஜேஷ். இவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சொக்கமடுகில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று இரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பள்ளிப்பட்டு சித்தூர் சாலையில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர்.புரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எஸ்.ஆர்.புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.