செய்திகள்

மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும்- திருமுருகன் காந்தி

Published On 2019-01-22 11:04 GMT   |   Update On 2019-01-22 11:04 GMT
மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றி பெறவே உயர் சாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை மோடி அரசு செயல்படுத்த நினைக்கிறது. அதை கண்டித்து வருகிற 27-ந்தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட உள்ளோம். மதுரையில் மேம்படுத்தப்பட உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் பெரியார் சிலையை வைக்க வேண்டும். மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத பிரதமர், மக்களால் எதிர்ப்பு வரும் என்பதால் அரசு விழாவை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகின்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News