செய்திகள்

காங்கயத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தந்தை போக்சோ சட்டத்தில் கைது

Published On 2019-01-09 10:56 GMT   |   Update On 2019-01-09 10:56 GMT
குடிபோதையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்தவர் 34 வயது கார் டிரைவர். இவருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வரும் டிரைவர் அடிக்கடி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மது போதையில் இருந்த அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பயந்த சிறுமி நடந்ததை தனது தாயிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தாய் இது குறித்து காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை காங்கயம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News