செய்திகள்
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எம்.ஜி.எம். ஹெல்த்கேருடன் இணைந்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துகிறது. #ChennaiMetroTrain
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எம்.ஜி.எம். ஹெல்த்கேருடன் இணைந்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துகிறது.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் நாளை (3-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
நேரு பார்க், கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், ஷெனாய்நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம், கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி ஆகிய நிலையங்களில் இந்த பரிசோதனை முகாம் நடக்கிறது உயரம், எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இருதய பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்படும்.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. #ChennaiMetroTrain