செய்திகள்
சேலத்தில் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி மீது வழக்கு
சேலத்தில் தம்பி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி மீது போலீசார் வழக்கு செய்தனர்.
சேலம்:
சேலம் பெருமாப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). தொழிலாளியான இவர் தனது தம்பியான குமார் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த குமாரின் மனைவி சுசிலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சுசீலா கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குபதிவு செய்தனர்.