செய்திகள்

வருகிற 20-ந்தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் பெறும் - ஓ.எஸ்.மணியன் உறுதி

Published On 2018-12-16 11:42 GMT   |   Update On 2018-12-16 12:03 GMT
வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். #Gajastorm

வேதாரண்யம்:

கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு ஒரு மாதமாகியும் மின் இணைப்பு பெறமுடியாமல் பல கிராமங்கள் உள்ளன. புயலில் பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அவைகளை சரிசெய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மின் மாற்றிகளும் சேதமானதால் திருவாரூர் மாவட்ட மின் மாற்றி மூலம் பிராந்தியக்கரை, மூலக்கரை ஆகிய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வேதாரண்யத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேதாரண்யம் தாலுகாவில் புயலால் விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் 4300 பேர் ஈடுபட்டுள்ளனர். 6 மின் மாற்றிகள் நாளை முதல் செயல்பட தொடங்கும். இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட மின் மாற்றியில் இருந்து மின் சாரம் பெறும் பிராந்தியக்கரை, மூலக்கரை பகுதிகளுக்கும் நாகை மாவட்ட மின் மாற்றி மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படும்.

வருகிற 20-ந் தேதிக்குள் நாகை மாவட்டம் முழுவதும் மின் வினியோகம் வழங்கப்படும். படகு மூலம் வண்டல், அவரிகாடு பகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அங்கு பூமிக்கடியில் கேபிள் அமைத்து மின்சாரம் வழங்க மின்துறை அமைச்சர் மூலம நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உயர் அழுத்த மின் சம்பவங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நிறைவடைந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

Tags:    

Similar News