செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-12-15 06:53 GMT   |   Update On 2018-12-15 06:53 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #trichyairport #goldseized

கே.கே.நகர்:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தை சேர்ந்த உம்முல் பரக்கத் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது , அவர் ரூ.12லட்சம் மதிப்புள்ள 388 கிராம் தங்க வளையல்கள் மற்றும் செயின்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உம்முல் பரக்கத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #trichyairport #goldseized

Tags:    

Similar News