செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் திமுக வெற்றிக்காக பாடுபட வேண்டும்- எஸ்.ஆர்.பார்த்திபன் பேச்சு

Published On 2018-12-01 10:42 GMT   |   Update On 2018-12-01 10:42 GMT
நாமக்கல்லில் நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய எஸ்ஆர் பார்த்திபன், பாராளுமன்ற தேர்தலில் பாடுபட வேண்டும் என்று கூறினார். #dmk #parliamentelection

நாமக்கல்:

நாமக்கல்லில் நகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை வகித்தார். கட்சியில் நகரச் செயலாளராக நியமிக் கப்பட்ட ராணா ஆனந்த் வரவேற்றார்.

கூட்டத்தில் கட்சியின் தேர்தல்பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கலந்து கொண்டு பேசியது:-

நாமக்கல் நகரில் உள்ள 39 வார்டுகளில் திமுக பொறுப்பாளர்கள் கட்சி கொடிகளை ஏற்ற வேண்டும். கட்சியில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். வீடுகள் தோறும் சென்று கலைஞரின் திட்டங்களையும், அ.தி.மு.க. வின் அவலங்களை எடுத்து ரைக்க வேண்டும். கட்சியில் பதவிக்கு ஆசைப்பட்டு வருவதை தவிர்த்து கட்சிக்காக பாடுபட வேண்டும் . வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவை காட்டிலும் 75 சதவீதம் கூடுதலான வாக்குகள் பெற்று கட்சி தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க கட்சியினர் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

முன்னதாக கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், கூட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் பால் ரவி, பூபதி, எம்.ஆனந்த், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #dmk #parliamentelection

Tags:    

Similar News